Posts

Showing posts from December, 2015

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

Image
உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமும் பண்பாடும் உலகமே போற்றும் கலாச்சாரமும் நமக்கே உரியது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், அந்த பெருமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிக மோசமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிக்கையில் மனம் வேதனை அளிக்கிறது. பெண்ணை போகப்பொருளாய் பார்க்கும் உலகில் பெண்ணை தெய்வமாய் மதிப்பதோடு பூமித்தாய் என்று பூமியை பெண்ணுக்கு ஒப்பாய் வணங்கி வரும் நமது பண்பாடும் கலாச்சாரமும் ஒரு சில பெண்களால் சீரழிந்து வருகிறது. மது அருந்துவது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்ற இவ்வேளையில் தான் ஆண்களுக்கு சமமாக நாங்களும் மது அருந்துகிறோம் என்று பெண்களில் சிலர் அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் இந்த மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆகி வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஆண்களே கூட மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான கருத்து அப்படி இருக்கையில் குடும்பத்தின் ஒளிவிளக்காக திகழும் பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களுக்கு நிகர் நா

மும்பையில் சேவை செய்வதில் முதன்மையாக ஒரு தமிழ் பெண்மணி

Image
மும்பையில் சேவை செய்வதில் முதன்மையாக ஒரு தமிழ் பெண்மணி - கீதா ஸ்ரீதர்  மும்பை மட்டுங்கா பகுதியில் தனது இரு பெண் பிள்ளைகள், கணவருடன் வசித்து வரும் தமிழ் பெண் கீதா ஸ்ரீதர் அவர்கள் செய்து வரும் சமூகப்பணிகள் அளப்பரியது. அவரை எனது நட்பாக அடைந்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன். சரி திருமதி கீதா ஸ்ரீதர் அவர்கள் செய்து வரும் சேவைகள் தான் என்ன?  கடந்த ௨௨  ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி மும்பைக்கு குடியேறிய பின்பு மும்பையில் ஒரு தனியார் பள்ளியில் பணிக்கு அமர்ந்தார் இயற்கையிலேயே குழந்தைகள் மேல் அளப்பரிய பாசம் உள்ளவரான கீதா அவர்கள் பள்ளியில் பணிக்கு அமர்ந்தது ஆச்சரியம் இல்லை, கல்விப்பணி செய்து வந்த அவருக்கு மும்பையில் சிறு சிறு குழந்தைகள் கேன்சர் நோயால் அவதிப்படுவது கண்டு மன உருகினார் அன்றில் இருந்து எங்கு குழந்தைகள் கேன்சரால் அவதிப்பட்டாலும் ஓடோடி சென்று உதவ துவங்கினார் அந்த சேவை மனப்பான்மை மென் மேலும் விரிவடைந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்த ஒரு இல்லம் நோக்கி திரும்பியது அந்த இல்லத்திற்கு உதவி செய்ய துவங்கி இன்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு தேவைகளை தனது சொந்த செலவில்

பேரிடர் மழையால் சென்னை பெற்றிருக்கும் நன்மைகள்..

Image
பேரிடர் மழையால் இனி சென்னையில் நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்: 1. கிரவுண்ட் ஃப்ளோர் ஃப்ளாட்டுகள் சீப்பான விலைக்கு வரும்..! கையில் பணமும், மனதில் துணிவும் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்..! 2. Web page திறப்பதற்கு மூன்று செகண்ட் ஆனால் கூட, ‘ஷிட்...! நான்சென்ஸ்..!’ என்று கத்துபவர்களுக்கெல்லாம் கூட தாம் பொறுமையோடு நாட் கணக்கில் இருக்க முடியும் என்பது் தெரிந்திருக்கும்..! பொறுமை கரண்ட்டினும் பெரிது..! 3. நம் பக்கத்து வீடுகளில்/ஃப்ளாட்களில் மக்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் குரல் எப்படி இருக்கும் என்பதையும் இப்போதுதான் பலர் தெரிந்து கொண்டிருப்பார்கள்..! 5. ரொம்ப நாட்களுக்கு பிறகு, மருமகள்கள், மாமியாருக்கு போன் பண்ணி ‘எப்படி இருக்கீங்க அத்தே..?” என்று கேட்டிருப்பார்கள் (எப்படி இருந்தாலும் புருஷன் வீட்டை விட்டு வெளியே போகமுடியாது என்பதால்..!). இருந்தாலும் அந்த ‘நல்லெண்ண’ gestureரினால், உறவுகள் கொஞ்சம் மேம்படும்..! 4. பல காலங்களுக்கு பிறகு, கணவன், மனவி, மகன், மகள், வேறு வழியில்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து, பார்த்து பேசிக்கொண்டதில், சில பிணக்குகள்/பி

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

Image
உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…” ஊரிலிருந்து வந்திருந்த எங்க விவசாயி அன்ன கேட்டாரு. “எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…” “மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?” “ஆமாண்ணே.. எப்படிண்ணே..” “உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?” “என்னாண்ணே சொல்றீங்க…?” “ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…” “பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…” “ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…” “ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.” “நல்ல விஷயம்தானண்ணே… சூரி

11 வயது திருநெல்வேலி சிறுமியின் உலக சாதனை

Image
11 வயது திருநெல்வேலி சிறுமி விசாலினியின் உலக சாதனை  விசாலினி   11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்- அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள். தன் சொந்த முயற்சியால் மட்டுமே,  உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, ஓர் இந்தியர். அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது. HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது

ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை நிறுத்துவோம்...

Image
பல ஆண்டுகளாக ரூபாய் நோட்டுகளில் எழுதும் பழக்கம் இந்தியர் மத்தியில் இருந்துவருவது மிகவும் கவலைக்குரியதாகும் இந்நிலையில் சில தினங்களாக ரூபாய் நோட்டுகளில் எழுதி இருந்தால் அது செல்லாது என்ற வதந்தியும் பரவி வருகிறது அது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது கிறுக்கப்பட்டிருந்தால் அவை வரும் ஜனவரி முதல் செல்லாது என்ற தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், அந்த தகவல் உண்மையில்லை. ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலும் அவை பண பரிமாற்றத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் எவ்வித அச்சமின்றி பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என்றார். மேலும், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எவ்வித அறிவிக்கையும் வெளியிடவில்லை என ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ள தகவலில் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், நோட்டுகளின் ஆயுள் குறைந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவ

மீண்டெழுந்த சென்னை மீண்டும் வீழாமல் பாதுகாப்போம்

Image
நூற்றாண்டு காணாத மழையால் நிலைகுலைந்த சென்னை மீண்டும் மீண்டெழுந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த பேரழிவிற்கு காரணம் ஆளும் ஆட்சிதான் என்று எதிர்கட்சிகளும், இல்லை இல்லை கடந்தகால ஆட்சியின் தவறான செஇயல்பாட்டால் தான் இப்படி நடந்தது  என்று ஆளும் கட்சியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும் விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டும் இருக்கின்றன, அவர்களுக்கு மக்களின் மேல் உள்ள அக்கறையின் பேரில் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்களா அல்லது எதிர்வர இருக்கும் பொதுத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்களா என்பது பொறுமையாக இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவி பொது ஜனங்களுக்கு தெரியாமல் இருக்காது.  நடந்தது நடந்துவிட்டது இனிமேல் நடப்பது நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே சாதாரண பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது, சென்னையை உலுக்கி எடுத்த மழையால் கட்டிய உடை தவிர  தங்களின் உடைமைகள் அனைத்தையும் இழந்தவர்கள் லட்சக்கணக்கான பொதுமக்கள், இப்போதைய அவர்களின் அவசர தேவை உடனடியாக அவர்களின் இருப்பிடத்துக்கு உத்தரவாதம் அளித