Posts

Showing posts from October, 2016

அத்திப்பழம்

Image
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும். 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப்  பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். 3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். 4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம். 5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு

பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கான முதன்மையான 10 இயற்கை வைத்தியங்கள்!!!

Image
பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கான முதன்மையான 10 இயற்கை வைத்தியங்கள்!!! ============================== ============================= 1.தண்ணீர். ---------------- பெருங்குடலை சுத்தப்படுத்த சிறந்த வழி அதிகளவில் தண்ணீர் பருகுவது. தினமும் 10 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அத்தியாவசியமாகும். சீரான முறையில் தண்ணீரை பருகி வந்தால், உடலில் இருந்து இயற்கையான முறையில் தீமையான நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற, உடலுக்கு தேவையான நீரையும் இளக்குதலையும் அளிக்கும். 2.ஆப்பிள் ஜூஸ். -------------------------- பெருங்குடலை சுத்தப்படுத்த சிறந்த வீட்டு சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது நற்பதமான ஆப்பிள் ஜூஸ். சீரான முறையில் ஆப்பிள் ஜூஸ் பருகினால் மலம் கழித்தலும், நச்சுப் பொருட்கள் உடைதலும் மேம்படும். மேலும் கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியமும் மேம்படும். 1. வடிகட்டாத ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூசுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். 2. 30 நிமிடங்கள் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 3. இந்த செயல்முறையை நாள் முழுவதும் பல முறை செய்யவும். இதனை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு கடைப்பிடிக்கவு

பெருங்குடலில் இருந்து மலம் வெளியேறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்.

Image
ந‌மது உடலில் உள்ள‍ பெருங்குடலில் இருந்து மலம் வெளியேறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள். ============================== ============== நாம் நிறைய முகநூல் நண்பர்கள் ச ித்த வித்தை என்கிற வாசியோகம்(சாகக் கலை) {சாகக் கலை என்பது நாம் தினமும் நம்முடைய ஜீவனை நசிப்பது விரயம் செய்வது அப்படி, செய்யாமல் உடலையும் உயிரையும் காத்து கொள்வது} வாசியோகம் கற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்கள் இப்போதே உடலை பேணிகாக்கவும் , இன்னும் மது ,மாமிசம்,புகைபிடித்தல்,போதை தரக்கூடிய லகரிவஸ்துகள் மற்றும் பல உணவு கட்டுப்பாடு ,தனிமனித ஒழுக்கம் ,இவற்றை கடைபிடித்து மருந்து மாத்திரை இல்லா வாழ்க்கையை மேற்கொண்டு உடலையும் உயிரையும் காயகல்பமாக்குவேம்(காயகல்பம் என்பது கடையில் விற்கும் லேகியம் அல்ல )காயம்-உடல்,கல்பம் -வலுவாக்குதல் என்ற பொருல், உடலைபெறவேண்டும் உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என யோகத்தை குறிக்கிறார். யோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாத

தேங்காய் பால்புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்.

Image
உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது. சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும் :- உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும ் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது. எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும் :- தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும். இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் :- போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உல

நீரிழிவுக்கு நிவாரணம் தரும் கீரை

Image
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கீரைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், கீரை உணவு எளிதில் ஜீரணமாகும். கீரைகளில் கொழுப்புச் சத்தும், கார்போஹைட்ரேட்டும் குறைந்த அளவிலேயே அமைந்துள்ளன. தாதுப் பொருட்களும், விட்டமின்களும் அதிகம் உள்ளன. விலை மலிவு என்பதோடு அன்றாடம் ஃபிரஷ்ஷாக கிடைக்கும் என்பதால், க ீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஒரு கீரைக்குத்தான் என்று இல்லை எல்லாக் கீரைகளுக்கும் மருத்துவக் குணம் உண்டு. முருங்கைக் கீரை அதிக இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை விருத்தி செய்யும். இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உள்ளது. இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கலாம். தாது புஷ்டிக்கு தனி அத்தாரிட்டி முருங்கைக் கீரைதான். விந்தைப் பெருக்க வீரியம் உள்ள இந்தக் கீரையை ‘விந்து கட்டி’ என்றும் சொல்வார்கள். முருங்கை கீரை ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தம் சுத்தமானால் எந்த நோயும் நம்மை அண்டாது. இதில், விட்டமின் ஏ, சி, சத்து உள்ளது. ம

FOOD BANK CHENNAI

Image
Image
சென்னை  வளசரவாக்கத்தில்  சுத்தமான  சுவையான  வடநாட்டு  வீட்டு  உணவு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றதும் மிகவும் ஆர்வத்துடன் சென்றேன். ஆஹா பொதுவாக வாடா இந்திய உணவுகள் விரும்பாத எனக்கே அவர்கள் அளித்த அனைத்து வைகயானஉணவுகளும் மிகவும் ருசியாகவும் மிகவும் சுத்தமாகவும் இருப்பதை கண்டு மிகவும் வியந்தேன்...அன்போடு உபசரித்து வடநாட்டு வீட்டு உணவை குறைந்த விலையில் அளித்த அளித்த நண்பர் திரு. Krishnan Subramanian Kolazhy​ அவர்களுக்கு  மிக்க  நன்றி...

All Actors Voice - Dubsmash

https://www.youtube.com/watch?v=goPaBKpAwJY  All Actors voice - Dubsmash

Tamil Comedy King Vadivelu - Dubsmash

https://www.youtube.com/watch?v=hH9uUxzYCoM

தலை முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு..!

Image
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தின மும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வழுக்கையில் முடி வளர :- கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். இளநரை கருப்பாக :- நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக :- ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். தலை முடி கருமை மினுமினுப்பு பெற :- அ

Dubsmash Rajini

Image

பூண்டின் மகத்துவம் ( Uses of GARLIC )

Image
* தினமும் இரண்டு பூண்டுப் பல் சாப்பிட்டுவந்தால், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும். * மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். * புற்றுநோய்க்கான அபாயம் குறைவதுடன், புற்றுநோய்க் கட்டிகளை வளரவிடாமல் தடுக்கும். * உடலில் தேவையற்ற வேதிப்பொருட்களான பாதரசம் மற்றும் காரீயம் போன்றவற்றை உடலைவிட்டு அகற்ற, பூண்டு உதவுகிறது. * புண்கள், காயங்கள் விரைவில் ஆறுவதற்கும், வாயுப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் இது மருந்து. * தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, அரை டம்ளர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதில் இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பல் சேர்த்து, நன்றாகக் காய்ச்சவும். அரை டம்ளராகச் சுண்டியதும், வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும். * இரண்டுப் பூண்டுப் பல்லை சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து, தோலில் ஏற்படும் எரிச்சல், சிறிய காயங்கள் மீது தடவிவர பலன் கிடை